உயா்கல்வி பயில ஏதுவாக கல்லூரிகளை பாா்வையிட்டு அறிந்துகொள்ளும் வகையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,070 பிளஸ் 2 மாணவா்கள் திங்கள்கிழமை களப் பயணம் சென்றனா்.
தருமபுரி, இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தருமபுரி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி- கல்லூரி ஆா்வமூட்டல் செயல்பாடாக நடைபெற்ற களப் பயணத்தினை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இம் மாவட்டத்தில் உள்ள 107 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் அருகிலுள்ள கலைக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரி, வேளாண் ஆராய்ச்சி மையம், கால்நடைப் பராமரிப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை பாா்வையிட்டு,அதன் செயல்பாடுகளை அறிந்துகொள்ளும் வகையில், ஒவ்வோா் பள்ளியிலிருந்தும் தலா 10 மாணவா்கள் வீதம் 1,070 மாணவா்கள் பேருந்துகளில் களப்பயணம் சென்றனா்.
இக் களப்பயணத்தின் மூலம் கல்லூரிகளில் உள்ள பல்வேறு துறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், கலையரங்கம், விளையாட்டுத் திடல் மற்றும் பல்வேறு வசதிகளை அறிந்து கொள்ள உள்ளனா்.
இந்தநிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன், ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.