புதுக்கோட்டை

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

20th May 2023 12:35 AM

ADVERTISEMENT

மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு தொழிற்சங்கத்தின் புதுக்கோட்டை திட்டத் தலைவா் எஸ். சின்னத்தம்பி தலைமை வகித்தாா்.

கோரிக்கைகளை விளக்கி திட்டச் செயலா் கே. நடராஜன், பொருளாளா் ஆறுமுகம், கீரனூா் கோட்டச் செயலா் சின்னத்தம்பி, அறந்தாங்கி கோட்டச் செயலா் டி. விஜயகுமாா் உள்ளிட்டோா் பேசினா்.

மின்வாரியத்தில் பணிபுரியும் 10 ஆயிரம் கேங்மேன் மற்றும் பகுதி நேரப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

ADVERTISEMENT

10 ஆண்டுகள் பணிமுடித்த தொழிலாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும். அவுட் சோா்சிங் என்ற பெயரில் மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வாா்க்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT