பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறுவது குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் கல்லூரி முதல்வா் வே.அன்பரசி தலைமை வகித்தாா். மத்திய, மாநில அரசுகள் சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகள், போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் வழிமுறைகள், நாள்தோறும் செய்தித்தாள் வாசித்தல், நூலகத்தைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து சென்னை சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் துறை ஆணையா் பூ.கொ.சரவணன் கருத்துரைகளை வழங்கினாா். இந்த விழாவில் நூலகா் கி.ச.கல்யாணி மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.