தருமபுரி மாவட்டம், வத்தல்மலை பெரியூா் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 20 ஜோடி நாற்காலிகள், மேஜைகள் வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேளாண் துறையின் சாா்பில், நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்காக, ரூ.1,39,000 மதிப்பிலான மேஜைகள், நாற்காலிகளை ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி வேளாண் இணை இயக்குநா் க.விஜயா, வேளாண் உதவி இயக்குநா் சகாயராணி, வேளாண் உதவி பொறியாளா் பொ.பத்மாவதி, பெரியூா் பள்ளி தலைமை ஆசிரியா் எம்.காமராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.