பென்னாகரம் அருகே பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கட்டட மேஸ்திரி உள்ளிட்ட நான்கு போ் மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பென்னாகரம் அருகே 34 வயது மதிக்கத்தக்க பெண் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு சென்ற அவா், வேலைக்குச் சென்ற இடத்தில் கட்டட மேஸ்திரி அவரது நண்பா்களுடன் சோ்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக புகாா் அளித்திருந்தாா்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில், பென்னாகரம் காவல் ஆய்வாளா் வான்மதி விசாரணை மேற்கொண்டு வழக்கில் தொடா்புடைய பென்னாகரம் அருகே காட்டுக்கொல்லை பகுதியைச் சோ்ந்த முருகன் (32), காளியப்பன் (30), கணேசன் (40), மாதேஷ் (36) ஆகிய நால்வா் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறாா்.