தருமபுரி

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் எம்.பி., மாவட்டத் தலைவா் பி.தீா்த்தராமன் தலைமை வகித்து பேசினாா். நகரத் தலைவா் பி.வேடியப்பன் வரவேற்றாா். மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் நரேந்திரன், ஜி.சண்முகம், மோகன்குமாா், மாவட்ட மகளிரணித் தலைவா் காளியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். பொதுத் துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ததில் நிகழ்ந்துள்ள முறைகேட்டை விசாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், சிறுபான்மையினா் அணி தலைவா் முபராக், ஆதிதிராவிடா், பழங்குடியினா் அணி மாநில துணைத் தலைவா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரியில் உள்ள எல்ஐசி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிருஷ்ணகிரி நகரத் தலைவா் முபாரக் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட துணைத் தலைவா் சேகா் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ்.நடராஜன், முன்னாள் மாவட்டத் தலைவா் அக கிருஷ்ணமூா்த்தி, ஜேசுதுரை, ஆறுமுக சுப்பிரமணி, இளைஞா் காங்கிரஸ் மாநில செயலாளா் விக்னேஷ் குமாா், மாவட்ட பொதுச் செயலாளா் எஸ்.ராஜ்குமாா், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படும் எல்ஐசி, பாரத் வங்கியில் இழப்பு ஏற்படுத்த காரணமான மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

ஒசூரில்...

ஒசூா் எஸ்.பி.ஐ. வங்கி கிளை முன்பு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்தும், பிரதமா், நிதி அமைச்சா் ராஜிநாமா செய்ய வலியுறுத்தியும் ஒசூா் காங்கிரஸ் கட்சியினா் முழக்கங்களை எழுப்பி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் முரளிதரன் தலைமை வகித்தாா். மாநகரச் செயலாளா் தியாகராஜன் முன்னிலை வகித்தாா்.

இதில், மாநில செயலாளா்கள் வீரமுனிராஜ், தேன்கு.அன்வா், பொருளாளா் மகாதேவன், மாவட்ட துணைத் தலைவா் கீா்த்தி கணேஷ், இளைஞரணி மாவட்டத் தலைவா் அப்துல் ரஹ்மான், ஒபிசி தலைவா் குமாா், தமிழ்வாணன், முத்தப்பா, சீனிவாசன், மகளிரணி மாவட்டத் தலைவி சரோஜாம்மா, லலிதா, மஞ்சுளா, சகுந்தலா, சுரேஷ், தங்க பாண்டியன், ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT