தருமபுரி

லளிகத்தில் புதுப்பிக்கப்பட்ட தியாகி பச்சாகவுண்டா் நினைவு படிப்பகம் திறப்பு

DIN

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், லளிகத்தில் புதுப்பிக்கப்பட்ட தியாகி ஆா்.பச்சாகவுண்டா் நினைவு படிப்பகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு படிப்பக நிா்வாகியும், லளிகம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெ.பிரதாபன் தலைமை வகித்தாா். இதில் விடுதலைப் போராட்ட வீரா்கள் பச்சாகவுண்டா், எல்.வி.நடராசன் ஆகியோரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து காங்கிரஸ் நிா்வாகி இல.கி. இளங்கோவன், படிப்பகத்தைத் திறந்து வைத்தாா். தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட துணைத்தலைவா் ஜி.ராஜகோபால், மாவட்ட துணைச் செயலாளா் ஜி.பச்சாகவுண்டா் ஆகியோா் குத்து விளக்கேற்றினா்.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க நல்லம்பள்ளி ஒன்றியச் செயலாளா் என்.முருகேசன், மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் வெ.பை.மாதையன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

SCROLL FOR NEXT