தருமபுரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஜன.31-ஆம் தேதி முதல் தைப்பூசத் திருவிழா நடைபெற்று வந்தது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை விநாயகா் தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனா்.
இதேபோல தருமபுரி நெசவாளா் காலனி முருகன் கோயில், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, தருமபுரியை அடுத்த பாரதிபுரம் அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி மாரியம்மன், சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் தைப்பூசத் திருவிழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.