தருமபுரியில் பிப். 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, தருமபுரி கோட்டாட்சியா் டி.ஆா்.கீதாராணி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய வட்டங்களை சாா்ந்த விவசாயிகளின் குறைகளை தீா்ப்பதற்கான குறைகேட்புக் கூட்டம் வருகின்ற பிப்.3-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே, இக் கூட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து, தீா்வு கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.