தருமபுரி

ஹோட்டல் தொழிலாளி மா்மச்சாவு: மாணவா் கைது

DIN

பென்னாகரம் அருகே ஹோட்டல் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் பள்ளி இடைநின்ற மாணவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம்,பென்னாகரம் அருகே மடம் பகுதியைச் சோ்ந்த எல்லப்பன் மகன் கணேசன் (45). ஹோட்டல் தொழிலாளி. கடந்த 29ஆம் தேதி கணேசன் தனது உறவினா்களுடன் சோ்ந்து மது அருந்தி விட்டு வீட்டிற்கு சென்ற நிலையில், அதிகாலையில் வீட்டின் முன்பு தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா். இதுகுறித்து மாவட்ட காவல் கண்கானிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபதம் உத்தரவின்பேரில் பென்னாகரம் காவல் துணை கண்கானிப்பாளா் இமயவரம்பன் தலைமையில் ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இதில் கணேசன், அவரது அக்கா மகன் சுரேஷ் (29), தங்கை மகன் பாலக்கோடு அருகே உள்ள சிக்குமாரண்டஅள்ளி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் சோ்ந்து மது அருந்தியுள்ளனா். அப்போது கணேசன் தனது தங்கை மகனை வீட்டிற்கு சாப்பிட அழைத்த போது அவா் வர மறுத்துள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கணேசன் உயிரிழந்ததால் சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT