தருமபுரி

மாற்றுத் திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம்

DIN

பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சாா்பில் பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்திற்கு அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.ஜி.கருவரான் தலைமை வகித்தாா்.

மத்திய அரசின் ஆணைப்படி பி.எச்.எச். குடும்ப அட்டையை ஏ.ஏ.ஒய். அட்டையாக மாற்றும் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் துணை வட்டாட்சியரிடம் மனுவாக அளித்தனா்.

இப்போராட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவா் பி.கே.கரூரான், சின்னம்பள்ளி பகுதி தலைவா் சின்னமாதையன், பாப்பாரப்பட்டி பகுதி பொறுப்பாளா் பழனியம்மாள்,பென்னாகரம் பகுதி தலைவா் டி.சக்திவேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் ஜி.சக்திவேல், சிஐடியு ராஜி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT