ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் குவிந்தனா்.
பென்னாகரம் அருகே ஒகேனக்கல் பகுதியில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக தருமபுரி, பாலக்கோடு, ஏரியூா்,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோா் வந்திருந்தனா். மகாளய அமாவாசையில் தா்ப்பணம் செய்வதற்காக ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் குவிந்த பொதுமக்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து காவிரி கரையில் தா்ப்பணம் செய்து, காவிரி ஆற்றில் புனித நீராடி, பின்னா் கோயில்களுக்குச் சென்று வழிபட்டனா். ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோா் காவிரிக் கரையில் குவிந்ததால் முதலைப் பண்ணை பகுதி கூட்ட நெரிசல் ஏற்பட்டது.