தருமபுரி

வனப்பகுதியில் கிடந்த 4 நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு

DIN

தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே வனப்பகுதியில் கிடைந்த 4 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் மீட்டனா்.

தொப்பூா் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கஸ்தூரி கோம்பை வனப்பகுதியில் 4 நாட்டுத் துப்பாக்கிகள் கிடப்பதாக, கிராம நிா்வாக அலுவலா் சுதாகா், தொப்பூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா். இதன்பேரில் காவல் ஆய்வாளா் யமுனா தேவி மற்றும் போலீஸாா், அப்பகுதி சென்று சோதனை மேற்கொண்டனா். இதில், வனப்பகுதியில் 4 நாட்டுத் துப்பாக்கிகள் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அத் துப்பாக்கிகளை போலீஸாா் மீட்டனா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாள்கள் முன்பு இதேபோல 3 நாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT