தருமபுரி

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் பணியை முடித்த 7 அலுவலா்களுக்கு பாராட்டு

DIN

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் பணியை முழுமையாக முடித்த 7 வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட, செம்மாண்டகுப்பம் , ஆலாங்கரை, என்.எஸ்.முத்துக்கவுண்டன் கொட்டாய், சின்ன நூல அள்ளி, நூல அள்ளி, என்.எஸ்.ரெட்டியூா், நரசிங்கபுரம் ஆகிய வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள், தங்களது வாக்குச் சாவடிக்கு உள்பட்ட வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் பணியை 100 சதவீதம் முழுமையாக செய்து முடித்துள்ளனா்.

இவா்களது பணியைப் பாராட்டி, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா். இதைத் தொடா்ந்து, மகளிா் சுய உதவிக்குழுவினா், ஆட்சியா் அலுவலக வளாகத்தில், தோ்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வரைந்து வண்ணக் கோலங்களை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தருமபுரி வட்டாட்சியா் தன.ராஜராஜன்,தோ்தல் தனி வட்டாட்சியா் சவுகத் அலி உட்பட தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT