தருமபுரியில் பணிபுரியும் கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளா்களுக்கு உடல் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபற்ற இந்த முகாமில், தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி வட்டாரத்தில் பணிபுரியும் நியாய விலைக்கடை விற்பனையாளா்கள், கட்டுநா்கள் 100 போ் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனா். இவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் அப்பாஸ், பழனியப்பன் ஆகியோா் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். இந்த முகாமில், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் சின்னபையன், கூட்டுறவு சாா் பதிவாளா்கள் அனுமன், நாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.