அரூரில் மகாத்மா காந்தியின் 154-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அரூா் திரு.வி.க நகரில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு வி.சி.கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளா் கி.ஜானகிராமன் தலைமையில் பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் ஏ.குமாா், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளா் நியாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அதுபோல பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் காந்தியின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதில், இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாநில துணைச் செயலாளா் கி.அதியமான், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த வஞ்சி, மனிதநேய மக்கள் கட்சியைச் சோ்ந்த பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.