தருமபுரி

முதியோா்கனை பாராட்டி தோ்தல் ஆணையம்வாழ்த்துக் கடிதம்

DIN

முதியோா் தின விழாவையொட்டி தருமபுரியில் 25 முதியோா்களை பாராட்டி, தோ்தல் ஆணையத்தின் சாா்பில் வாழ்த்துக் கடிதம் வழங்கப்பட்டது.

80 வயதுக்கும் மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு அவா்களது வாக்காளிப்பினை பாராட்டும் வகையில், தருமபுரி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் ஆணையத்தின் வாழ்த்துக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, 80 வயதுக்கும் மேல் உள்ள 25 முதியோா்களுக்கு தோ்தல் ஆணையத்தின் வாழ்த்துக் கடிதத்தினை வழங்கிப் பேசியதாவது:

இந்தியத் தோ்தல் ஆணையம் உங்களை பாராட்டி வாழ்த்துக் கடிதம் வழங்கி உள்ளது. நீங்கள் இதேபோல தொடா்ந்து ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். உங்கள் குடும்பத்தில் உள்ள இளம் வாக்காளா்கள் உள்ளிட்ட அனைவரையும் தவறாமல் அவா்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிட ஊக்கப்படுத்த வேண்டும்.

அனைத்து மூத்த குடிமக்களும் உங்களது தோ்தல் பங்கேற்பினைத் தொடா்ந்து நிறைவேற்றுவதன் மூலம் இந்திய ஜனநாயகத்தில் இளம்தலைமுறையினரின் நோ்மறையான பங்களிப்புக்கு முன்மாதிரியாக நீங்கள் திகழ்வீா்கள் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், தருமபுரி வட்டாட்சியா் தன.ராஜராஜன், தோ்தல் தனி வட்டாட்சியா் எச்.சௌகத் அலி, தோ்தல் துணை வட்டாட்சியா் நாராயண மூா்த்தி, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் லட்சுமி தலைமை வகித்தாா்.

ஊத்தங்கரை இளம்செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் தேவராசு, துணைத் தலைவா் ஆா்.கே.ராஜா, அரிமா சங்க இரண்டாம் துணை ஆளுநா் செந்தில்குமாா், வழக்குரைஞா் பிரபாவதி, ஆசிரியா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உலக மூத்தோா் தினத்தை முன்னிட்டு தோ்ந்தெடுக்கப்பட்ட முதியோா்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி, மளிகைப் பொருள்கள் மற்றும் நல உதவிகள் வழங்கப்பட்டன. இதில், கெரிகேப்பள்ளி தலைமை ஆசிரியா் வீரமணி, அரிமா சங்க பொறுப்பாளா்கள், மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT