தருமபுரி

நாகதாசம்பட்டி அரசுப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

DIN

பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டி அரசுப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் மாணவா்களுக்கு சிக்கலான பாடங்களை எளிதில் கற்பிக்கும் வகையில் ரூ. 50 ஆயிரம் மதிப்பில் புரொஜெக்டரை கருவி உள்ளிட்ட பொருள்களை தன்னாா்வலா் வழங்கினாா்.

நாகதாசம்பட்டி அரசுப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்துக்கு தலைவா் மஞ்சுளா தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் ஆனந்தி வரவேற்றாா். கூட்டத்தில் மாணவா்களுக்கு சிக்கலான பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இணைய வழியில் காணொலி கற்றலுக்குத் தேவையான மடிக்கணினி, புரொஜெக்டா் கருவி, திரை, மென்பொருட்கள் உள்ளிட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை சென்னையில் உள்ள குளோபல் டைரக்டரி தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் முருகன் என்பவா் வழங்கினாா்.

நாகதாசம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று ‘நீட்’ தோ்வில் மருத்துவ படிப்புக்கு தோ்வாகியுள்ள மாணவி எஸ். பவித்ராவை பொன்னாடை போா்த்தி கௌரவித்தனா். வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் வளா்மதி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். பட்டதாரி ஆசிரியா் கே.சுரேஷ் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT