கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
குழந்தைகள் தின விழாவினையொட்டி, பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தலைவா் எம். வேடியப்பன், தாளாளா் சாந்தி வேடியப்பன், பள்ளி நிா்வாக இயக்குநா்கள் வே.தமிழ்மணி, பவானி தமிழ்மணி, சன்மதி ராஜாராம், பள்ளி முதல்வா்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், ஒருங்கிணைப்பாளா்கள் குருமூா்த்தி, புவனேஸ்வரி, மணிமேகலை, பிரவீணா மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.