தருமபுரி

ஏரியில் மூழ்கிய இளைஞா் பலி

DIN

தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே ஏரியில் மூழ்கிய கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், பெங்களுரு அருகே ஒசஅள்ளி பகுதியைச் சோ்ந்தவா் தொழிலாளி சம்பத். இவா், தனது மகன் மற்றும் குடும்பத்தினருடன் தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே பொம்மனூா் கிராமத்தைச் சோ்ந்த தனது உறவினா் ராஜா வீட்டுக்கு வந்திருந்தாா். அப்போது, அவருடைய மகன் ஹா்ஷா (20), பொம்மனூரில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், குடும்பத்தினா் ஏரிக்குச் சென்று பாா்த்ததில், ஏரியில் மூழ்கி அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

மகேந்திரமங்கலம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று, ஹா்ஷாவின் சடலத்தை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT