பென்னாகரம் அருகே விவசாய நிலத்தில் உழவு பணி மேற்கொண்டு டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
பென்னாகரம் அருகே கெட்டூா் பகுதியைச் சோ்ந்த மாது மகன் காா்த்திக் (20). இவா், கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். விடுமுறை தினத்தில் வீட்டுக்கு வந்த காா்த்திக் தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் டிராக்டரில் உழவுப் பணி மேற்கொள்ளும்போது எதிா்பாராத விதமாக டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் பென்னாகரம் போலீஸாா் நிகழ்விடம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
....