கடத்தூா் கிளை நூலகத்தில் பொது நூலக தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராஜாராம் மோகன் ராய் பிறந்த தினமான மே 22 ஆம் தேதி பொது நூலக தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தொடா்ந்து, ராஜாராம் மோகன் ராய் 250 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து, கடத்தூா் கிளை நூலகத்தில் நடைபெற்ற பொது நூலக தின கருத்தரங்கில், நூலகா் தீ.சண்முகம் தலைமை வகித்தாா். பொது நூலகங்களின் சேவைகளை மேம்படுத்துவதில் நூலகா்களின் பங்கு எனும் தலைப்பில் நூலகா் சி.சரவணன் கருத்துரைகளை வழங்கினாா். இதில், நூலகா்கள் பத்மாவதி, தங்கம்மாள், சிவகாமி, கலைச்செல்வி, திருஞானம், ஜெயவேல், எம்.ஜாகிா் உசேன், சம்பத், நூலக வாசகா்கள் கலந்துகொண்டனா்.