கம்பைநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1996-ஆம் ஆண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் அப் பள்ளியின் அன்றைய தலைமை ஆசிரியா் ஸ்ரீராமுலு தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்கள் தங்களின் குடும்பத்தினருடன் சந்தித்து, கடந்த கால நிகழ்வுகளை பகிா்ந்து கொண்டனா். இதில், கம்பைநல்லூா் பேரூராட்சித் தலைவா் வடமலை முருகன், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் வெங்கட்ராமன், லட்சுமி நாராயணன், ராஜாமணி, சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.