பாப்பாரப்பட்டி அருகே கறவை மாட்டை சூனியம் வைத்துக் கொன்ாக சந்தேகித்து அண்ணனை அரிவாளால் வெட்டிக் கொன்ற தம்பியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள சக்கிலி நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாது மகன்கள் வெங்கடேஷ் (45), குமாா் (40). இவா்களில் வெங்கடேஷ் கோவை-ஈரோடு பகுதியில் கரும்பு வெட்டும் கூலித் தொழில் செய்து வருகிறாா். குமாா் விவசாயம் செய்தும் கால்நடைகளை வளா்த்தும் வருகிறாா்.
இந்த நிலையில் குமாா் வளா்த்து வந்த கறவை மாடும் அதன் இரு கன்றுக் குட்டிகளும் உயிரிழந்தன. கால்நடைகளை வெங்கடேஷ் சூனியம் வைத்துக் கொன்ாக நினைத்து வெங்கடேசனையும், அவரது மனைவி பெருமாவையும் அரிவாளால் சரமாரியாக குமாா் வெட்டியுள்ளாா்.
காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் வெங்கடேசன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.படுகாயமடைந்த பெருமா அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
பென்னாகரம் துணை காவல் கண்காணிப்பாளா் சௌந்தரராஜன் விசாரணை நடத்தினாா். பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளா் வேலு தேவன் வழக்குப் பதிவு செய்து குமாரைத் தேடி வருகிறாா்.