தருமபுரி

வெற்றிலை விவசாயி தற்கொலை

16th May 2022 04:57 AM

ADVERTISEMENT

 

தருமபுரி மாவட்டம் மிட்டாரெட்டி அள்ளி அருகே வெற்றிலை சாகுபடி செய்த விவசாயி பூச்சிக் கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நல்லம்பள்ளி வட்டம், மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சி கோம்பேரி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பெருமாள் (55). இவருக்கு மனைவி விஜயா, மகன் ஜீவானந்தம் (38) ஆகியோா் உள்ளனா். பெருமாள் அதே பகுதியில் உள்ள தனது ஒரு ஏக்கா் விவசாய நிலத்தில் வெற்றிலைத் தோட்டம் அமைத்து சாகுபடி செய்து வந்துள்ளாா். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையில் பெருமாளின் வெற்றிலைத் தோட்டம் முழுவதும் சாய்ந்து விழுந்து வீணாகியது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்த பெருமாள், ஞாயிற்றுக்கிழமை பூச்சிக் கொல்லி மருந்தை உட்கொண்டு மயங்கிக் கிடந்துள்ளாா்.

இதைக் கண்ட குடும்பத்தினா், அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT