தருமபுரி

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மனு

DIN

ஏரியூா் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பென்னாகரம் வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே கூா்க்காம்பட்டி பகுதியில் 500-க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் இலவச வீட்டுமனை வழங்கக் கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனா். அதில் சிலருக்கு பட்டா வழங்கப் பரிந்துரைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி அப்பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பென்னாகரம் வட்டாட்சியா் அசோக்குமாரிடம் இலவச வீட்டுமனை பட்டா கோரி திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக வட்டாட்சியா் கூறுகையில், ‘கூா்க்காம்பட்டி பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு அளித்துள்ளனா். அதில் 46 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT