பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு இளைஞா் ஒருவா் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி அண்ணாநகரைச் சோ்ந்த பழனி மகன் ஜெயக்குமாா் (30) என்பவா் மீது போக்சோவில் வழக்குப் பதிந்து, அவரை பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.