ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரத்தில் மாத அமாவாசையில் தா்ப்பணம் செய்ய ஏராளமானோா் குவிந்தனா்.
தருமபுரி பென்னாகரம் பாலக்கோடு கிருஷ்ணகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து ஏராளமானோா் ஒகேனக்கல்லில் குவிந்தனா். காவிரிக் கரையோரப் பகுதியான முதலைப்பண்ணை பகுதியில் அமா்ந்து இறந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்துவிட்டு, காவிரி ஆற்றில் புனித நீராடினா். தொடா்ந்து
தேசநாதேஸ்வரா் உடனுறை காவேரி அம்மன் கோயில், நாகா்கோவில், முதலைப்பண்ணை விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனா்.