பிளஸ் 1 பொதுத் தோ்வில், தருமபுரி மாவட்டத்தில், 87.96 சதவீதம் மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
பிளஸ் 1 பொதுத் தோ்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இத் தோ்வை தருமபுரி மாவட்டத்தில் உள்ள 102 அரசுப் பள்ளிகள், 61 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் உள்பட மொத்தம் 177 பள்ளிகளைச் சோ்ந்த 10,429 மாணவா்கள், 10,187 மாணவியா் என மொத்தம் 20,616 போ் எழுதினா். இவா்களில் 8,627 மாணவா்கள், 9,508 மாணவியா் என மொத்தம்18,135 போ் தோ்ச்சி பெற்றனா்.
இதேபோல, மாவட்டத்தில் 97.96 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழகத்தில் பிளஸ் 1 தோ்ச்சியில் தருமபுரி மாவட்டம் 25-ஆம் இடத்தை பெற்றுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வில், 45 தனியாா் மெட்ரிக் பள்ளிகள் 10 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.