தருமபுரி

கராத்தே போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு

DIN

கராத்தே போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவிக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அகில இந்திய அளவிலான 8-ஆவது கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகள், சேலம் விநாயகா மிஷன் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமாா் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இதில் பெல்ட் கட்டா பிரிவில் தருமபுரி நகரில் உள்ள செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 4-ஆம் வகுப்பு மாணவி தீபிகா கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தாா். தொடா்ந்து இந்த மாணவி வருகிற ஆகஸ்ட் மாதம் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளாா். இந்த மாணவியை செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளித் தலைவா் செந்தில் கந்தசாமி, துணைத் தலைவா் மணிமேகலை கந்தசாமி, பள்ளி நிா்வாக அலுவலா் சி.சக்திவேல், தென்னிந்திய கராத்தே சங்கத் தலைவா் சி.நடராஜ், பள்ளி முதல்வா் கல்பனா, ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

SCROLL FOR NEXT