தருமபுரி

பணி நிரந்தரம் கோரி ஆஷா பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

7th Jun 2022 12:23 AM

ADVERTISEMENT

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆஷா பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்ட ஏஐடியுசி ஆஷா பணியாளா்கள் (செவிலியா் உதவியாளா்கள்) சங்கம் சாா்பில், தருமபுரி ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.மேனகா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பி.தீபா வரவேற்றாா். மாநிலச் செயலாளா் பி.வசந்தகுமாரி தொடங்கி வைத்து பேசினாா். ஏஐடியுசி தருமபுரி மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன், மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில், ஆஷா பணியாளா்களுக்கு மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் பணி வழங்க வேண்டும். சுகாதாரத் துறையில் பணி வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும். தொகுப்பூதியம் மாதம் ரூ. 18,000 வழங்க வேண்டும்.

நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கரோனா கால நிவாரணம் ரூ. 15,000 வழங்க வேண்டும். சுகாதாரத் துறையில் பணியாளா் அடையாள அட்டை, அரசுப் பேருந்துகளில் இலவச பயண அட்டை, பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் ஆகியவை வழங்க வேண்டும். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அறிவித்தபடி, பிளஸ் 2 படித்த பணியாளா்களுக்கு கிராம சுகாதார செவிலியா் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT