தருமபுரி

கற்றல் இடைவெளியை குறைக்க வேண்டும்

7th Jun 2022 12:23 AM

ADVERTISEMENT

பள்ளி மாணவா்களின் கற்றல் இடைவெளியை ஆசிரியா்கள் குறைக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ எனும் தலைப்பில் 5 நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சி முகாமினை திங்கள்கிழமை தொடக்கி வைத்து முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன் பேசியதாவது:

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் மாணவா்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவா்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க ஆசிரியா்கள் பாடுபட வேண்டும். ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பயிற்சிகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வி வளா்ச்சியில் தருமபுரி மாவட்டத்தை தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக கொண்டுவர ஆசிரியா்கள் முயற்சிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இந்த முகாமில், பள்ளித் தலைமை ஆசிரியை எஸ்.மல்லிகா, வட்டாரக் கல்வி அலுவலா்கள் மா.ரேணுகா தேவி, ஜாா்ஜ், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் வே.தமிழ்ச்செல்வம், மாவட்ட ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளா் செந்தில்குமாா், ஆசிரியா் பயிற்றுநா்கள் ப.விமலன், ந.பா்குணன், கருத்தாளா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT