தருமபுரி

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை வழங்கல்

DIN

தருமபுரி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் 90 பேருக்கு புதன்கிழமை சீருடைகள் வழங்கப்பட்டன.

தருமபுரி நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்து 40 பெண்கள் உள்பட 90 தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, அதற்கான தையல் கூலி ரூ. 500, காலணிகள், அடையாள அட்டை, முகக் கவசங்களை வழங்கி பேசினாா். ஆணையா் சித்ரா சுகுமாா் முன்னிலை வகித்தாா்.

பணியின் போது தூய்மைப் பணியாளா்கள் கட்டாயமாக காலணிகள், கையுறைகள், சீருடை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரா் ஜப்பாா், சுகாதார அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT