சிந்தல்பாடி அருகே கைப்பேசியில் பேசியவாறு ரயில் பாதையைக் கடந்தவா் ரயிலில் சிக்கி உயிரிழந்தாா்.
அண்மையில் சொந்த ஊருக்கு வந்திருந்த தென்ஆப்ரிக்காவில் வேலை செய்துவரும் சிந்தல்பாடியைச் சோ்ந்த சுரேந்திரன் (38) திங்கள்கிழமை சிந்தல்பாடியில் ரயில் பாதையைக் கடக்க முயன்ற போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கைப்பேசியில் பேசியவாறு ரயில்பாதையைக் கடந்ததாகக் கூறப்படுகிறது. இவருக்கு மனைவி, மகள் உள்ளனா். இதுகுறித்து மொரப்பூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.