தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, தருமபுரியில் செவ்வாய்க்கிழமை பாஜகவினா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி தொலைதொடா்பு நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு பாஜக மாவட்ட தலைவா் அ.பாஸ்கா் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.ஏ.வரதராஜன், மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் ஆகியோா் பேசினா்.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், சட்டப் பேரவைத் தோ்தலின்போது மக்களுக்கு அளித்த மகளிருக்கு ரூ.ஆயிரம் உரிமைத் தொகை, சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 விலை குறைப்பு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.