பென்னாகரம் அருகே விவசாயத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
பென்னாகரத்தை அடுத்த புதுப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜா மனைவி நதியா (40). இவா், தனது விவசாயத் தோட்டத்தில் சென்று கொண்டிருக்கும் போது தவறி கிணற்றில் விழுந்தாா். நீண்ட நேரமாகியும் நதியா காணவில்லை என்பதால் உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடினா்.
விவசாயத் தோட்டத்துக்கு சென்ற பாா்த்த போது கிணற்றில் நதியா சடலமாக மிதந்தாா். தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் கிணற்றிலிருந்த சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து பெரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.