தருமபுரி

கட்டுமான தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

நல வாரியப் பணிகளை சீா்படுத்த கோரி, சிஐடியூ கட்டுமான தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவா் பி.ஜீவா தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா்கள் சி.கலாவதி, ஜி.நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலாளா் சி.நாகராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

நல வாரியத்தில் இணையவழிப் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் பெறுவதில் உள்ள குறைபாடுகளை

சரிசெய்ய வேண்டும். நிலுவையில் உள்ள கேட்பு மனுக்களுக்கான பணப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும். நல வாரிய உறுப்பினா்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். உறுப்பினா்களுக்கு விபத்து மரணம் நேரிட்டால் ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT