தருமபுரி

அரசு பொறியியல் கல்லூரியில் வளாகத் தோ்வு: 145 பேருக்கு பணி ஆணை

DIN

தருமபுரி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வளாகத் தோ்வு நடைபெற்றது. இதில், தோ்வான 145 பேருக்கு பல்வேறு நிறுவனங்களின் சாா்பில், வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்பட்டது.

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் அண்மையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், இறுதியாண்டு மாணவ, மாணவியா் 278 போ் பங்கேற்றனா். இவா்களில், 145 போ் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்ற தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கான வேலைவாய்ப்பு ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் வி.சுமதி, மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்புக்கான ஆணையை வழங்கி பேசினாா்.

இதில், துணை முதல்வா் வி.ராஜ்குமாா், பணியமா்த்தல் அலுவலா் கிருபா சங்கா், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகை திருட்டு புகாா்: திரைப்படத் தயாரிப்பாளா் வீட்டு பணிப் பெண் தற்கொலை முயற்சி

ஐஏஎஸ் தோ்வுக்குப் பயிற்சி: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்

890 கூடுதல் சிறப்பு பேருந்துகள்

கோவை - தன்பாத் இடையே இன்று முதல் சிறப்பு ரயில்

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன நாள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT