தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே முள்புதரில் கேட்பாரற்றுக் கிடந்த நாட்டுத் துப்பாக்கியைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட மிட்டாரெட்டி அள்ளி அருகே சவுளுக்கொட்டாய் பகுதியில் உள்ள முள்புதரில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. இதுகுறித்து புதன்கிழமை தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை போலீஸாா், நாட்டுத் துப்பாக்கியைக் கைப்பற்றினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.