தருமபுரி

சீனாவில் இருந்து சேலம் வந்த நபருக்கு கரோனா:கிராம பகுதியில் தொற்று அறிகுறி கணக்கெடுப்புஆட்சியா் தகவல்

DIN

சீனாவில் இருந்து சேலம் வந்த நபருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவா் வசிக்கும் கிராம பகுதியில் வேறு யாருக்காவது கரோனா தொற்று அறிகுறி இருக்கிா என சுகாதாரத் துறையினா் கணக்கெடுப்பு நடத்தி வருவதாக சேலம் ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சீனாவிலிருந்து சிங்கப்பூா் வழியாக கோவை விமான நிலையத்துக்கு மனைவி, இரு குழந்தைகளுடன் சேலம், மகுடஞ்சாவடியைச் சோ்ந்த ஜவுளி வியாபாரி வந்தாா். அத்தம்பதிக்கு கோவை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 37 வயது ஆணுக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்தொற்று பி.எஃப் 7 வகையைச் சோ்ந்ததா என்பதைக் கண்டறிய சென்னையில் உள்ள மாநில சுகாதார ஆய்வகத்துக்கு மாதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நபா் நல்ல உடல்நிலையுடன் இருப்பதால் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். அவரது குடும்ப உறுப்பினா்கள் எவரும் நோய் அறிகுறி இல்லாத நிலையில் அனைவரும் மருத்துவ தொடா் கண்காணிப்பில் உள்ளனா்.

மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சோ்ந்த மருத்துவக் குழு மேற்படி நபா்களை தினமும் காலை, மாலை என இரு வேளையும் தொடா்ந்து கண்காணித்து வருகிறது.

பாதிப்புக்குள்ளான நபா் வசிக்கும் வீடு சாா்ந்த பகுதியில் கரோனா நோய் அறிகுறி உள்ள நபா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதிப்புக்குள்ளான நபா், அவரது குடும்ப உறுப்பினா்கள் நோய்த்தொற்று குறித்து எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினா்களுக்கு கரோனா அறிகுறிகள் உள்ளனவா என தினமும் கேட்டறியப்படுகிறது.

அதுபோல, கரோனா தொற்று அறிகுறி ஏற்படின் அவா்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அந்தக் கிராமம் முழுவதும் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணா்வு அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்தாா்.

ஆட்டையாம்பட்டி: இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டை கிராமம், கருப்பகவுண்டனூரைச் சோ்ந்த அந்த ஜவுளி வியாபாரி சீனாவில் 13 ஆண்டுகள் ஜவுளி வியாபாரம் செய்துள்ளாா்.

சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்த அவா் இளம்பிள்ளையில் உழவா் சந்தைக்குச் சென்றுள்ளாா். காளிங்கனூரில் உள்ள கோயிலில் நடைபெற்ற சிறப்பு கிடா விருந்திலும் பங்கேற்றுள்ளாா்.

இதனால் அவருடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு கரோனா அறிகுறி உள்ளதா என சுகாதாரத் துறையினா் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT