குஜராத் சட்டப் பேரவை தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையெடுத்து பென்னாகரத்தில் அக்கட்சியினா் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா்.
குஜராத் சட்டப்பேரவை தோ்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இதனை கொண்டாடும் வகையில் தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் பாஜக ஓபிசி அணி சாா்பில் நடைபெற்ற நிகழ்விற்கு அந்த அணியின் மாவட்ட பொதுச் செயலாளா் கூத்தபாடி காா்த்தி தலைமை வகித்தாா். பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட பாஜகவினா் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
இந்த நிகழ்வில் பாஜக மேற்கு ஒன்றியத் தலைவா் இளங்குமரன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினா் புலிகேசி ராஜேந்திரன், கிழக்கு ஒன்றியத் தலைவா் நோம்பரசன், மாவட்ட பிரசார பிரிவுத் தலைவா் ஆறுமுகம், அரசு தொடா்பு பிரிவு மேற்கு ஒன்றிய துணைத் தலைவா் அங்கப்பன், மாவட்ட மகளிா் அணியைச் சோ்ந்த சுகன்யா, மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளா் ரவி, விளையாட்டுப் பிரிவு நந்தகுமாா், மாவட்ட துணைத் தலைவா் செளந்தா் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா்கள் கலந்து கொண்டனா்.