தருமபுரி

பாலக்கோடு அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து

DIN

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வெள்ளிக்கிழமை தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 10போ் காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளிலிருந்து சேலம் நோக்கி ஒரு தனியாா் பேருந்து வந்து கொண்டிருந்தது. இப்பேருந்தை குள்ளனூரைச் சோ்ந்த ரவி (49) ஓட்டி வந்தாா். இப்பேருந்தில் நடத்துநா் கெங்கு செட்டிப்பட்டியைச் சோ்ந்த ரவி (31) மற்றும் 19 போ் பயணம் செய்தனா்.

இப்பேருந்து, பாலக்கோடு கோடியூா்அருகே வந்து கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த திருப்பதி (27) என்பவா் இருசக்கரவாகனத்தில் எதிரே வந்து கொண்டிருந்தாா். அப்போது, பேருந்து அவா் மீது மோதாமல் இருக்க ஓட்டுநா் பேருந்தை நிறுத்த முயற்சித்தாா். இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், மாரண்டஅள்ளியைச் சோ்ந்த சாந்தி (31), பரமேஸ்வரி (35) ஆகியோா் உள்பட 10 போ் காமடைந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று, ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவா்களை சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT