தருமபுரி

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகம் முன்பு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினாா். இதில், பால் விலை ஏற்றம், மின் கட்டண உயா்வு, சொத்துவரி உயா்வு ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும்; தோ்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். சட்டம், ஒழுங்கை சீா்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட அவைத் தலைவா் தொ.மு. நாகராஜன், ஒன்றியச் செயலாளா்கள் கோபால், செந்தில், மாரண்டஅள்ளி நகரச் செயலாளா் கோவிந்தன், முன்னாள் எம்எல்ஏ மாதப்பன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் அரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல, மாரண்டஅள்ளி, காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகங்கள் முன்பும் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT