தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய மனித உரிமைகள் தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை தேசிய மனித உரிமைகள் தின விழிப்புணா்வு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் தேசிய மனித உரிமைகள் தின உறுதிமொழியை வாசிக்க, அனைத்துத் துறை அலுவலா்களும் உறுமொழியேற்றனா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பழனிதேவி, தனித்துணை ஆட்சியா் வி.கே. சாந்தி, அரசுத்துறை அலவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.