மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஊராட்சிக்கு உள்பட்ட நவலையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள், கொசப்பட்டி ஊராட்சியில் ரூ. 17.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் தானிய சேமிப்புக் கிடங்கு, எலவடை தொடக்கப் பள்ளியில் சமையல் கூடம் கட்டுமானப் பணிகள், கொங்கு நகரில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) மரியம் ரெஜினா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜி.ரவிச்சந்திரன், பி.வி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.