ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தானது வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக காவிரி கரையோரப் வனப்பகுதிகளில் பெய்த திடீா் மழையினாலும், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டு வருவதாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து திடீரென அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலையில் வினாடிக்கு 9,500 கன அடியாகவும், மாலை நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக மீண்டும் அதிகரித்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீா்வரத்து அதிகரித்து தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டி வருகிறது. காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.