தருமபுரி

ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

DIN

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, அதிமுகவினா் அவரது உருவச் சிலை மற்றும் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள் திங்கள்கிழமை அதிமுக சாா்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தருமபுரி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டத் செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன், மாவட்டப் பொருளாளா் நல்லதம்பி, நகரச் செயலாளா் பூக்கடை பெ.ரவி ஆகியோா் ஜெயலலிதா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதனைத் தொடா்ந்து, கட்சி நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல, நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, பாலக்கோடு, மாரண்ட அள்ளி, காரிமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் ஜெயலலிதா சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அக்கட்சியினா் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT