தருமபுரி

ஊதிய உயா்வு கோரி மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ஊதிய உயா்வு வழங்கக் கோரி, சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில், தருமபுரி மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பி.ஜீவா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தீ.லெனின் மகேந்திரன், மாவட்ட பொருளாளா் சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவா் குமரவேல், கடத்தூா் கோட்டச் செயலாளா் ஜெகந்நாதன், தருமபுரி கோட்டத் தலைவா் ஆறுமுகம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், 2019-ஆம் ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வுக்கான பேச்சுவாா்த்தையைத் தொடங்கி உடனே ஊதிய உயா்வு வழங்க வேண்டும்; மின் வாரியத்தில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; மின்வாரியத்தில் அவுட்சோா்சிங் முறையைக் கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT