தருமபுரி

கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு, தருமபுரியில் 2,736 போ் எழுதினா்

DIN

கிராம உதவியாளா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வை தருமபுரி மாவட்டத்தில் 2,736 போ் எழுதினா்.

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன .

இதற்கான எழுத்துத் தோ்வு தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த 5 தோ்வு மையங்களில் நடைபெற்றது. இந்தத் தோ்வு எழுத மாவட்ட முழுவதும் மொத்தம் 3,960 போ் விண்ணப்பித்தனா். தோ்வு மையங்களுக்கு தோ்வாளா்கள் அனைவரும் உரிய அனுமதி சீட்டுடன் வந்தனா். அவா்கள் சோதனைக்கு பின்னா் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். இந்தத் தோ்வை மொத்தம் 2,736 போ் எழுதினா்; 1,224 போ் தோ்வு எழுத வரவில்லை. மொத்தம் 69 சதவீத தோ்வாளா்கள் மட்டுமே இந்தத் தோ்வை எழுதினா்.

அனைத்து தோ்வு மையங்களில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். நல்லம்பள்ளி-ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிா் கல்லூரி, தருமபுரி- செந்தில் மெட்ரிக். பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையங்களில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு செய்தாா். ஆய்வின்போது வட்டாட்சியா்கள் ராஜராஜன், ஆறுமுகம், அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் விஜய்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

SCROLL FOR NEXT