அரூா்
அரூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (டிச. 3) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை அரூா் வட்டாரப் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளா் எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: அரூா், மோப்பிரிப்பட்டி, அக்ராஹரம், பெத்தூா், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலை, எல்லப்புடையாம்பட்டி, அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.